செவ்வாய், 30 ஜூலை, 2013

கண்கள்

தாயும் மொழியும் கண்கள்.
தாயகம் காப்பவர் கண்கள்.
சேயும் செந்தமிழும் கண்கள்.
சொந்தங்கள் யாவரும் கண்கள்.

கம்பன் கழகம் கண்கள்.
காலை ஏடுகள் கண்கள்.
எம்மகளிர் பண்புகள் கண்கள்.
மாண்புடை இளையோர்கள் கண்கள்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்.
உறவுக்கு இரவே கண்கள்.
இதயத்தின் வாசல் கண்கள்.
எண்ணத்தின் வார்த்தைகள் கண்கள்.

கடவுளைக் கடைந்தன கண்கள்.
கடவுளைக் கண்டதா கண்கள்?
இமயத்தையும் எட்டும் கண்கள்.
ஆனால் இல்லையே….
காதலுக்கு மட்டும் கண்கள்.

    த. சிவப்பரகாசம்.   19.04.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக