இதயம்
திருமாலின் இதயத்தில் திருமகள்!
அனுமாரின் இதயத்தில் திருவும் மாலும!;
இன்னல்செய் இராவணன் இதயத்தில் இருந்ததால்
அரக்கர் குலம் முலநாசம் ஆனதே!
பாங்குற பகுத்தறிவு ஒளியுட்டி
எங்களினம் ஏற்றமுற வழிகாட்டி
வங்கக்கடல் தாலாட்ட உறங்குவதும்
எதையும் தாங்கும் இதயம்!
இனிய கம்பன் இதயம் கவிதையில்!
புனித அன்னை இதயம் அமைதியில்!
கர்மவீரர் காமராசர் இதயம் கல்வியில்!
கவியரசர் கண்ணதாசன் இதயம் கண்ணனிடமே!
கையளவு இதயத்தில் கடல்அலையாய் வந்தார!;
மைஎழுதிய விழியாலே மயக்கத்தைத் தந்தார்!
இதழாலே இதயத்தை இதமாக இழைத்தார்! – கண்
இமைக்க மறந்தாலும் மறக்காது என் இதயம்!
சிவப்பிரகாசம் 02.05.2011
திருமாலின் இதயத்தில் திருமகள்!
அனுமாரின் இதயத்தில் திருவும் மாலும!;
இன்னல்செய் இராவணன் இதயத்தில் இருந்ததால்
அரக்கர் குலம் முலநாசம் ஆனதே!
பாங்குற பகுத்தறிவு ஒளியுட்டி
எங்களினம் ஏற்றமுற வழிகாட்டி
வங்கக்கடல் தாலாட்ட உறங்குவதும்
எதையும் தாங்கும் இதயம்!
இனிய கம்பன் இதயம் கவிதையில்!
புனித அன்னை இதயம் அமைதியில்!
கர்மவீரர் காமராசர் இதயம் கல்வியில்!
கவியரசர் கண்ணதாசன் இதயம் கண்ணனிடமே!
கையளவு இதயத்தில் கடல்அலையாய் வந்தார!;
மைஎழுதிய விழியாலே மயக்கத்தைத் தந்தார்!
இதழாலே இதயத்தை இதமாக இழைத்தார்! – கண்
இமைக்க மறந்தாலும் மறக்காது என் இதயம்!
சிவப்பிரகாசம் 02.05.2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக